புதுதில்லி, டிச.17- குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியதைத் திரும்பப் பெற்றிட மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமையன்று குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, குடியரசுத் தலை வர் மாளிகையில் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் சென்ற இக்குழுவினர் இது தொடர்பாக ஒரு மனுவையும் குடியரசுத் தலை வரிடம் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறுகையில் சோனியா காந்தி, நிலைமை மிக வும் மோசமாக மாறியிருக்கிறது என்றும், அமைதியாகப் போரா டிய ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடந்து கொண்டவிதம் மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் தெரி வித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு முதலானவர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். (ந.நி.)