இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை மேற்கு பிராந்திய கூடுதல் டிஜிபியாக கே.நடராஜன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.