“ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட 20 கிரிமினல்வழக்குகள் ஜெகன் மோகன் ரெட்டி மீது நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்டவர் எந்த அடிப் படை ஆதாரங்களும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி (என்.வி. ரமணா) மீது அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். எனவே, அவரை உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்றுவழக்கறிஞர்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.