கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 548318ல் இருந்து 566840 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை 16475ல் இருநது 16890 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 321723லிருந்து 334822ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 415 பேர் உயிரிழந்துள்ளனர். 18552 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.