tamilnadu

img

சாமியார் கல்கி ஆசிரமம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சாமியார் கல்கிக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
சாமியார் கல்கி மற்றும் அவரது மகன் நடத்திவரும் நிறுவனங்களில் வரிஏய்ப்பு நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. 
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் ஆசிரமம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கல்கியின் மகன் என்கேவி கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனம் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களில் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.