‘மதவெறியைத் தூண்டி அப்பாவிகளை கொன்றழிக்கிறது’
கொல்கத்தா, மார்ச் 2- மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரபல சின்னத்திரை நடிகை சுபத்ரா முகர்ஜி. கடந்த 2013-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவர், தில்லி வன்முறைச் சம்பவங்க ளைத் தொடர்ந்து, பாஜக-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சுபத்ரா முகர்ஜி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள் ளார். அதில் அவர் கூறியிருப்பதா வது: “மதத்தால் மக்களைப் பிரித்து, வெறுப்புணர்வை விதைக்கும் நோக் கிலேயே பாஜக செயல்படுகிறது. அதுவே பாஜகவின் சித்தாந்தமாக மாறியதாக உணர்கிறேன். தற்போது கூட தில்லியில் நிறைய அப்பாவிகள் கொல்லப்பட் டுள்ளனர். பலரது வீடுகள் சூறை யாடப்பட்டுள்ளன. கலவரம் மூலம் மக்களைப் பிளவுபடுத்தியுள்ளனர். அதற்குக் காரணம் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் உள்ளிட்டோரின் வெறுப்பூட் டக் கூடிய பேச்சுக்கள்தான். ஆனா லும் அவர்கள் மீது, பாஜக எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தில்லி கலவரம் என்னை நிலை குலையச் செய்தது. வெறுப்பு பேச்சு களால் ஆதாயம் தேடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் இனி இருக்கமாட்டேன். அவர்கள் இருக்கும் கட்சியில் இருக்கக் கூடாது என முடிவெடித்து எனது ராஜி னாமா முடிவை தற்போது கையில் எடுத்துள்ளேன்.” இவ்வாறு சுபத்ரா முகர்ஜி கூறி யுள்ளார்.