tamilnadu

img

அயோத்தி வழக்கில் செப்.2 முதல் முஸ்லிம் அமைப்புகள் வாதம் துவக்கம்

புதுதில்லி, ஆக.31- அயோத்தி வழக்கில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் முஸ்லிம் அமைப்புகளின் வாதம் துவங்குகிறது.  உத்தரப்பிரதேச மாநி லம் அயோத்தியில் சங்பரி வாரத்தினரால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் தொடர்பான வழக்கில் சர்ச் சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கும் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என்று தெரி வித்தது. சம்பந்தப்பட்ட தரப்பு களுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது.

3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம் பந்தப்பட்ட தரப்புகள் மத்தி யில் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியவில்லை என்று மத்தி யஸ்தர்கள் உச்சநீதிமன் றத்தில் தெரிவித்தனர். சமரச பேச்சு தோல்வி அடைந்ததை தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசி யல் சாசன அமர்வு விசா ரிக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி கள் சந்திரசூட், அசோக் பூஷன், பாப்டே, அப்துல் நாசிர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு கடந்த 6 ஆம் தேதி முதல் நாள் தோறும் விசா ரணை நடைபெற்று வரு கிறது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 16 நாட்கள் நடந்த விசாரணை யில் இந்து அமைப்புகளின் வாதம் நிறைவடைந்தது. ராம்லல்லா, நிர்மோகி அகாரா ஆகிய அமைப்பு களின் வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு பெற்றன.  சர்ச்சைக்குரிய பகுதியில் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக இந்து அமைப்பினர் தங்களது வாதத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் வாதம் செப்டம்பர் 2 ஆம தேதியன்று துவங்குகிறது. இதன் பின்னர் நவம்பர் மாதத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப் படுகிறது.