திருவனந்தபுரம்:
எந்த அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளத் துணியாத நிலைப்பாட்டை கேரளாவில் யுடிஎப் - பாஜக மேற்கொண்டுள்ளன என்றும், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரின் கூற்றின் அடிப்படையில், இரு கட்சிகளும் முதல்வர் பதவி விலகவேண்டும் என போராட்டம் நடத்தி வருவதாகவும் சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் அமலாக்கத்துறையினருக்கு அளித்த வாக்குமூலம் முதலில் பாஜகவின் நாளிதழில் முதல்பக்க செய்தியாக மட்டுமே இருந்தது.இதன் அடிப்படையில் மற்ற தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள், செய்தி மற்றும் விவாதங்களை ஏற்பாடுசெய்தன. பின்னர், முதல்வர் பதவி விலகக் கோரி பாஜக தலைவரின் அறிக்கைவந்தது. வழக்கம் போல, காங்கிரஸ் அதை பின்தொடர்ந்தது. கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொப்னா சுரேஷ் பாஜக மற்றும் யுடிஎப் தலைவராக மாறியது எவ்வளவு அவமானகரமானது.கேரளாவில் நடந்து வரும் வளர்ச்சிநடவடிக்கைகள் மக்களுக்கு எட்டாதவாறு இருக்க திட்டமிட்ட முயற்சி இதற்குப் பின்னால் உள்ளது. இந்தியாவில் பொதுக் கல்வியில் கேரளா முதல் முழுமையான டிஜிட்டல் மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளை அவர்கள் போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தனர் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு பயனளிக்கும் இந்த திட் டத்தை மூடிமறைக்க ஒரு பயனற்ற முயற்சியும் உள்ளது.கடந்த மூன்று மாதங்களாக, பெரும்பான்மையான ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தங்கக் கடத்தல் தொடர்பான ஒற்றை பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகின்றன. அவர்கள் முன்பு இருந்ததைப் போலவேபின்பற்றுகிறார்கள். அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசியல் ஆதாயத்திற் காக புலனாய்வு அமைப்புகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது நடைபெற்று வரும் இந்த தூய்மையற்ற நகர்வுகளை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த இவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது என கொடியேரி தெரிவித்துள்ளார்.