வாரங்கல்
நாட்டின் தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்திற்கு அருகே ஒரு சாக்கு குடோனில் உள்ள கிணற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பிணமாக கிடந்தனர். விசாரணையில் சஞ்சய் என்பவர் 9 போரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் படி குற்றவாளியான சஞ்சய்க்கு தூக்குத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது வாரங்கல் நீதிமன்றம்.
கடந்த மே மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.