புதுதில்லி:
தில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகியுள்ளனர்.தில்லியில் பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகையும்பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிர தேசம் ஆகிய தில்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில்அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகையும் தில்லிக்கு காற்று மாசு பிரச்சனையை அதிகரித்துள்ளது. இந்தபுகையின் மூலம் காற்றில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவை கலக்கின்றன.
காற்றில் மாசு அதிகரிப்பதால், அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது. அக்டோபர் 27 அன்று காலை 8 மணி நிலவரப்படி ‘ஏர்குவாலிட்டி இண்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 377 ஆக இருந்தது. (காற்றுதர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிறபோது காற்றின் தரம் மோசம் என்று அர்த்தம்). காற்று தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமானகாற்றை சுவாசிக்க முடியும். அமைதியான காற்றும், குறைந்த வெப்பநிலையும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு துணை நிற்கின்றன.தில்லியில் காற்றின் தரம்மோசமாகி வருவது பொதுமக்க ளுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மரம், செடிகொடி களை அதிகளவில் நடுவது காற்றுமாசை கட்டுப்படுத்த சிறிதளவுஉதவும் என்று இயற்கை ஆர் வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.