ஆந்திராவில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர் சிலைஅடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.