tamilnadu

img

இந்தியா: கொரோனா பாதிப்பு 4000த்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000த்தை தாண்டி உள்ளது. 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்நிலையில் தற்போது  இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. 
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4000த்தை தாண்டி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது என தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து 291 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 693 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருக்கிறது.  மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690- பேருக்கு கொரோனா தொற்றுள்ளது. அதேபோல், இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில்  571 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது