புதுதில்லி,ஆக.02- கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலக்குறைவு, கர்ப்பிணி என்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். புதிய நடைமுறைகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது.