tamilnadu

img

நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கையும் சரிந்தது!

புதுதில்லி:
‘தாம்சன் ராய்ட்டர்ஸ்’ (Thomson reuters) மற்றும் ‘இப்சாஸ்’ (IPSAS) எனப்படும்சந்தை ஆய்வு நிறுவனங்கள் இணைந்து, ‘ஆன்லைன்’ மூலம் சர்வே நடத்தி, அதனடிப்படையில், நுகர்வோர் உணர்வுகள் குறித்த குறியீட்டெண்ணை மாதந்தோறும் வெளியிடுகின்றன.அந்த வகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், கடந்த மே மாதத்தில் (அதாவது இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சிஅமைந்தது முதல்) இருந்து, நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்து வருவதாகவும், கடந்த ஜூலையில் மட்டும் சற்றே அது அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையுடன் ஒப்பிடும்போது 2019 ஆகஸ்ட் மாதத்தில், நுகர்வோர்மத்தியிலான நம்பிக்கை 3.1 சதவிகிதம் சரிந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.வேலைவாய்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், முதலீடு, தற்போதைய தனிப்பட்ட நிதிநிலை ஆகிய 4 அம்சங்களில், நுகர்வோர்மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.