tamilnadu

img

பெட்ரோலிய விலை உயர்வுகளை ரத்து செய்க!

மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூன் 23- மத்திய மோடி அரசாங்கம், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக ஜூன் 22  திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிப ரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

மோடி அரசாங்கம், ஏற்கனவே கொரோனா  வைரஸ் தொற்றாலும், அதனைத்தொடர்ந்து எவ்வி தத் திட்டமிடலுமின்றி தான்தோன்றித்தனமாகவும், முற்றிலும் தவறான முறையிலும் சமூக முடக்கத்தை அறிவித்ததன் காரணமாகவும் மக்களின் வாழ்வாதாரங்களை கருணையற்ற முறையில் அழித்திருக்கிறது. இப்போது கடந்த பதினைந்து நாட்களாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல்  மற்றும் டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. பெட் ரோல் லிட்டருக்கு 7.97 ரூபாயும்,  டீசல் 8.88 ரூபாயும் உயர்த்தி யிருக்கிறது. இது கோடானு கோடி மக்களின் வாழ்க்கையை மேலும் முடமாக்கிக் கொண்டி ருக்கிறது. பெட்ரோலியப் பொருட் களின் மீதான கலால் வரி களை பெருமளவில் குறைத்திட வேண்டும் என்று இடது சாரிக்கட்சிகள் கோருகின்றன.  உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கே விலைகள் உயர்த்தப் பட்டிருக்கின்றன.  இவ்விலை உயர்வுகளை ரத்து செய்து, மக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்.

மக்கள் மீது மோடி அரசின் தொடர் தாக்குதல்

எண்ணெய் சந்தை நிறுவனங்கள், மக்களின் வாழ்க்கையைக் காவு வாங்கி க்கொண்டு,  கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கமும் அதிக வருவாய்கள் ஈட்டிக்கொண்டிருக்கின்றன. இவை கிரிமினல்தனமாகும்.    மக்களின் ஜீவாதாரப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம், மக்கள் மீது மேலும் மேலும் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், இடதுசாரிக் கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கின்றன.

கோரிக்கைகள்

1. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை  ரத்து செய்து, விலைகளைக் குறைத்திட வேண்டும்.

2.வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு மாதத்திற்கு 7500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ரொக்கப்பணம் உடனடியாக வழங்கிட வேண்டும்.

3. தேவைப்படும் அனைவருக்கும், நபருக்கு தலா 10 கிலோ உணவு தானியங்கள் வீதம் வழங்கிட வேண்டும். மோடி அரசாங்கம் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருப்ப தற்கு எதிராக, நிலச்சரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வரும் ஜூலை 2-4 தேதிகளில் நடத்தவுள்ள வேலை நிறுத்தத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றன.

மத்தியத் தொழிற்சங்கங்கள் வரும் 2020 ஜூலை

3 அன்று தங்களின் கோரிக்கை சாசனத்தின் மீது நடத்தவிருக்கும் அகில இந்திய எதிர்ப்பு அறை கூவலுக்கும், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதர வையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கின்றன. இடதுசாரிக் கட்சிகள், மதச்சார்பற்ற எதிர்க்கட்சி களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு, இந்த அகில இந்திய எதிர்ப்புக் கிளர்ச்சிக்கான தேதியை அறிவித்திடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)