மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுதில்லி, மார்ச் 11- மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மிகவும் வெட்கங்கெட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குதிரை பேரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாஜக, மீண்டும் ஒருமுறை, மத்தியப்பிரதேசத்தில் சில சந்தர்ப்ப வாதப் பேர்வழிகளைப் பயன் படுத்துவதன்மூலம் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகக் வெட்கங்கெட்ட முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஜனநாய கத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இது, ஜனநா யகத்தின் மீதான மக்களின் தீர்ப்பை யும், சட்டத்தின் ஆட்சியையும் தலை கீழாக்கிடும் பாஜகவின் அணுகு முறையையே பிரதிபலிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு பாஜக அல்லாத மாநில அரசாங்கங் களில் பல எதிர்ப்பை அளித்துக்கொண்டி ருப்பதன் பின்னணியில், பாஜக இந்த அரசாங்கங்களைக் கவிழ்ப்ப தற்கான விதத்தில் மிகவும் மட்டரக மான முறையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
பாஜகவின் ஜனநாயகவிரோத செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. குறிப்பாக, பாஜகவின் அபரிமிதமான பணபலம் மற்றும் குதிரை பேரத்திற்கு எதிராக வும் அதனால் ஏற்படுத்தப்படும் மிரட்டல் மற்றும் புகழ்ச்சி போன்ற வற்றிற்கு எதிராகவும் மிகவும் விழிப்புடன் இருந்திட வேண்டும் என்று பாஜக அல்லாத மாநில அர சாங்கங்களின் கவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவருகிறது. மக்களின் தீர்ப்பை இத்தகைய வெட்கங்கெட்ட ஜனநாயக விரோத முறையில் மீறக் கூடாது. இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கூறி யுள்ளது.
(ந.நி.)