கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் தலைநகர் தில்லி கொரோனா பாதிப்பில் 3 வது இடத்தில் உள்ளது. இங்கு 16281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 316 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தில்லியில் நாடாளுமன்றத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்றத்தின் இணைப்பு கட்டிடத்தில் உள்ள 2 மற்றும் 3வது மாடியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தற்போது அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.