tamilnadu

ஏர் இந்தியா சர்வர் பிரச்சனையால் பயணிகள் அவதி

இன்று அதிகாலை ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சர்வர் பிரச்சனையால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்திய அரசின், 'ஏர் இந்தியா' விமான நிறுவனம், உலகின் பல்வேறு நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 3 மணிக்கு விமான நிறுவனத்தின், மெயின் சர்வரில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக, பயணிகளுக்கு போர்டிங் பாஸ் கொடுக்க முடியாத சூழல் எழுந்தது. இதையடுத்து 5 மணி நேர இடையூறுக்கு பிறகு, சர்வர் சரி செய்யப்பட்டது. 

இதுபற்றி ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோஹனி, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சிஸ்டம் மீண்டும் சரி செய்யப்பட்டது. மீண்டும், சிஸ்டம் செயல்பட ஆரம்பித்துவிட்டது. பயணிகள் இடையூறுக்கு உள்ளானதிற்கு, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சர்வர் பிரச்சனையால் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.