states

img

விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானி உட்பட 47 பேரின் உடல்கள்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 பேரின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (ஏஐ 171) விபத்துக்குள்ளாகி வெடித்து தீ பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் மற்றும் விமானம் விழுந்த கட்டடத்தில் இருந்த 34 பேர் என மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 பேரின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விஜய் ரூபானி உட்பட 24 பேரின் உடல்கள், அவரவர் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.