கல்லெறிந்து, கலவரத்தில் ஈடுபட்டார்களாம்...
புதுதில்லி, அக்.2- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற் கான சிறப்பு உரிமைகளைப் பறித்ததற்குப் பின், அங்கு கல் எறிந்தார்கள்; கலவரத்தில் ஈடு பட்டார்கள் என்று இதுவரை 144 சிறுவர்களை, காஷ்மீர் காவல்துறை கைது செய்தி ருப்பது தெரியவந்துள்ளது. காஷ்மீர் சிறுவர்கள், பாது காப்புப் படையினரால் சட்ட விரோதமாக கைது செய்யப் பட்டுள்ளனர் என்று குழந்தை கள் நல ஆர்வலர் எனாக்ஷ் கங் குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலை யில், இதுதொடர்பாக விசா ரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது.
நீதிபதி அலி முகமது மேக்ரே தலைமையிலான அந்தக் குழு, சிறுவர்கள் கைது செய்யப்பட் டது தொடர்பாக ஜம்மு - காஷ் மீர் மாநில காவல்துறையினர் அளித்த அறிக்கையையே, தற் போது நீதிமன்றத்தில் சமர்ப் பித்துள்ளது. அதில்தான், “கல் எறிந்த தாகவும், வன்முறை நடத்தி தனி யார் மற்றும் பொதுச்சொத்துக் களை சேதப்படுத்தியதாகவும் காஷ்மீரில், இதுவரை 144 சிறார் கள் கைது செய்யப்பட்டுள்ள னர்; அவர்களில் 9 மற்றும் 11 வயது சிறார்களும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆனால், இவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட வில்லை; அவர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே கைது செய்யப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் காவல்துறை சமாளிக்க முயன் றுள்ளது.