புதுச்சேரி லாஸ்பேட் நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் செவ்வாயன்று (ஆக. 6) வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் ஆனந்து, பாபு உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.