tamilnadu

img

கோவிட்-19 : புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

புதுச்சேரியில் கோவிட்-19 தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில், நேற்று வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது. இதில் 53 பேர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக நெட்டப்பாக்கம், மேட்டுப்பாளையம், தவளக்குப்பம், தருமாபுரி, முத்தியால்பேட்டை, கதிர்காமம், முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட்வர்கள் 38 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 17 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், சேலம், சென்னையில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில், கோவி-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை.