புதுச்சேரி, பிப். 17- மத்திய நிதியை தடுத்து சுய லாபத்திற்காக செயல்படுகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி திங்களன்று (பிப்-17) செய்தி யாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மருத்துவ நிகர்நிலை பல்க லைக்கழகங்களும், மருத்துவ கல்லூரிகளுக்கு, கடந்த 2017ம் ஆண்டு மத்திய மருத்துவ கழ கத்தின் உத்தரவின்படி சென்டாக் கலந்தாய்வு மூலம் தகுதியான புதுச்சேரி மாணவர்கள் சேர்க்கைக்கு அனுப்பப்பட்டனர். உரிய விதிமுறையின் அடிப்படை யில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசின் தரப்பில் தவறு எதுவும் நடைபெற வில்லை என்று அப்போதே சட்ட மன்றத்திலும் கூறினோம். ஆனால் ஆளுனர் கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, அதிகாரி களை அலைக்கழித்து, மன உளைச் சலை உருவாக்கினார். இதனால் அதிகாரிகள் மீதான மரியாதையை யும், மக்களிடம் குறைத்துள்ளார். அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க ஆளுனர் தவறான நடவடிக்கை எடுத்தார். கிரண்பேடி அனைத்திலும் மூக்கை நுழைத்து, தனக்குள்ள அதிகாரம் தெரியாமல், முறையாக விதிமுறைப்படி செயல்படும் அதிகாரிகளுக்கு மன உளைச்சலை உண்டாக்கியதற்கு கிரண்பேடி பதில் சொல்ல வேண்டும். அதிகார மில்லாத நிலையில் அதிகாரிகளை தொடர்ந்து ஆளுநர்மாளிகைக்கு அழைத்து கூட்டம் போடுவது, தன்னிச்சையாக உத்தரவு போடு வது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல் செயல்படுவ தும் கிரண்பேடியின் அன்றாட வேலை யாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை யும் மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களை தடுப்பது, புதிய திட்டங்களை நிறுத்துவது, டெல்லி சென்று சுற்றுலா திட்ட நிதியை தடுத்து நிறுத்துவது, வெள்ள தடுப்பு கட்டுவ தற்கு ஒப்புதல் தராமல் இருப்பது, மக்கள் விரும்பும் அரிசியை தராமல் இருப்பது, ஏஎப்டிபஞ்சாலை தொழி லாளர்களுக்கான கோப்புகளில் ஒப்புதல் தரமால் இருப்பது, உள்ளாட்சிதேர்தலை நடத்த ஆணை யரை நியமித்தால் தடுப்பது ஆகிய வைகளையே செய்து புதுச்சேரியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகின்றார். இவரது தலையீட்டால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம் நடைபெறவில்லை. பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை யில்லை. சுய விளம்பரத்திற்காக தினமும் 60 பேரை அழைத்து கொண்டு சென்று புகைப்படம் எடுத்து டுவிட்டர், முகநூலில் பதிவு செய்வது மட்டுமே அவரது பணியாக உள்ளது. அதிகாரி களை பழிவாங்குவது கிரண்பேடி, பாதுகாப்பது நாங்கள். அதனால்தான் நிர்வாகம் நடைபெறுகின்றது. எனக்கு செயலாளர் போட்டுக் கொண்டேன், துணை நிலை ஆளுன ருக்கு ஏன் செயலாளரை நியமித்து கொள்ளவில்லை? நிழல் செயலாள ராக ஒருவர் செயல்படுகின்றார். அமைச்சரவை கூட்டத்திற்கு ஆளுனரின் செயலர்தான் செயலர். ஆனால் கடந்த 2 ஆண்டாக அமைச்சர வையின் செயலர் இல்லாமலேயே கூட்டம் நடத்துகின்றோம். ஆலோசகர் நியமித்து கொள்ள கூறினால், சிறப்பு அதிகாரியை நிய மித்து கொள்கின்றார். அமைச்சர வைக்கு மத்திய அரசு நிதி அதிகா ரத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி கொடுத்தும், அதற்கும் அனுமதி அளிக்காமல் கோப்பை வைத்துள்ளார். மொத்தத்தில் புதுச்சேரிக்கு வர வேண்டிய நிதியை தனது சுய லாபத்திற்காக தடுத்து புதுச்சேரியின் வளர்ச்சி தடுக்கிறார் ஆளுநர் கிரண்பேடி. இவ்வாறு முதல்வர் கூறினார்.