புதுச்சேரி, ஜூன் 20- புதுச்சேரி பட்ஜெட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த் துவதற்கான உரிய திட்டங் கள் இடம்பெற வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. புதுச்சேரி அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், இம்மாதம் இறுதியில் நடைபெற உள் ளது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சிஐடியு பிரதேச தலைவர்களிடம் முதல்வர் நாராயணசாமி கருத்துக் களை கடிதம் வாயிலாக கேட்டிருந்தார். அதன்படி, புதுச்சேரி முதல்வருக்கு சிஐடியு பிர தேச செயலாளர் ஜி.சீனு வாசன் அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் பாரம்பரிய தொழிலான பஞ்சாலைத் தொழிற்சாலைகள் கடும் நெருக்கடியில் தள்ளப் பட்டுள்ளது. நூற்றுக்கணக் கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வந்த ஏ.எப்.டி., சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலைகளை அவற்றின் நேர்த்தியான வேலைப்பாடு களுக்கு உலகப் பிரசித்தி பெற்று விளங்கியது. இத்த கைய பஞ்சாலைகளை மீண் டும் புனரமைத்து இயக்குவ தற்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
புதுச்சேரியில் தொழிலா ளர் துறையின் கீழ் இயங்கி வரும் அமைப்புசாரா நல சங்கத்தை வாரியமாக மாற்றி, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். கொரோனா தொற்று பர வலை தடுக்கும் வகையில் மார்ச் 25ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன் காரணமாக அன்றாட உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அமைப்புசாரா தொழிலா ளர்கள் முதல், ஆலைத் தொழிலாளர்கள் வரை அனைவரது வாழ்க்கையும் முடங்கிப் போயுள்ளது. எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெ டுக்க ஒவ்வொரு தொழிலா ளர் குடும்பத்திற்கும் மாதம் 7.500 ரூபாய் வீதம் ஆறு மாதத்திற்கு நிதி உதவியும், மாதம் 10 கிலோ அரிசியும் மத்திய அரசோடு இணைந்து புதுவை அரசு வழங்க வேண்டும்.
புதுவை அரசின் கீழ் இயங்கும் பாண்லே, பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி, பான்பேப், ஆகிய நிறுவனங் களும், குரமாம்பேட் விவ சாய பண்ணையும் பலவீன மடைந்துள்ளன. இந்த நிறு வனங்களில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆண் டுக்கணக்கில் ஊதியம் வழங் கப்படாமல் உள்ளது. இத னால் இந்த தொழிலாளர்க ளின் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரு கிறார்கள். எனவே பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கி நிறுவ னங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதால பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாது காக்கவும் ஆக்கபூர்வமான திட்டங்கள் இடம்பெற வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.