பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை வழங்கவேண்டும், டிசம்பர், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள், அதிகாரிகள் சார்பில் புதுவை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், தலைவர் தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.