புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி தலைமை தபால் நிலையம் முன்பு பொதுச் செயலாளர் கிறிஸ்தோபர் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன், நிர்வாகிகள் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.