நாகர்கோவில், ஜூலை 6- கன்னியாகுமரி மாவட்டத்தில் வர லாற்று சிறப்புமிக்க திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் 400 ஆண்டு களுக்கு பிறகு புதனன்று குடமுழுக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வ தற்காக இந்து சமயம் மற்றும் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிறிய கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டு அந்த கோவில்களின் புகைப்படங் களை கொண்டு சிறிய ஆல்பம் தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த ஒவ்வொரு சிறிய கோவில்களுக்கும் திருப்பணி மேற் கொள்ள தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற் கான பணிகளை மேற்கொள்ள இருக்கி றோம்.
இம்மாவட்டத்தில் உள்ள 12 சிவா லயங்களில் ஒன்றான திக்குறிச்சி மகா தேவர் கோவிலில் திருப்பணிகள் செய்ய ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோடு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். மீதமுள்ள 11 கோவில் களுக்கு நேரடியாக சென்று தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். குமரி மாவட்டத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கோவில் களுக்கென தமிழ்நாடு அரசு அதிகள வில் நிதியுதவி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், இன்னும் ஏதேனும் கோவில களின் பணிகள் விடுப்பட்டிருந்தால் அந்த பணிகளையும் நிறைவேற்ற அரசு காத்தி ருக்கிறது என்றார். மேலும் ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை அகற்றுமாறு அதிகாரி களுக்கு வாய்மொழி உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அதி காரிகள் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டி ருந்த காவிக் கொடிகளை அகற்றினார் கள்.