tamilnadu

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரி கையெழுத்து இயக்கம்

அறந்தாங்கி, ஜூலை 18- மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட் டவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுப்ரமணியபுரத்தில் கே. தண்டபாணி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் தர்மராஜ் தொடங்கி வைத்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மாவட்டத் துணைச் செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மேகராஜன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, சிபிஎம் ஒன்றிய குழு உறுப் பினர், மேகவர்ணம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களிடம் கையெ ழுத்து பெறப்பட்டது.