tamilnadu

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர்,அரியலூர் முக்கிய செய்திகள்

இன்று எரிவாயு குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 24- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 2019-க்கான எரி வாயு உருளை இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 25 (வியாழன்) பிற்பகல் 5 மணிக்கு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, எரிவாயு உருளை இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறை களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

வாசிப்பு குறித்து முகாம்-பேரணி
மன்னார்குடி, ஜூலை 24- கூப்பாச்சிக் கோட்டை கிளை நூலகத்தில் தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பாக வாசிப்பு முகாம் மற்றும் வாசிப்பு குறித்த பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.கண்ணகி தலைமை வகித்தார். வாசிப்பு முகாம் பற்றி மாவட்ட நூல கர் ஆண்டாள், கூத்தாநல்லூர் நூலகர் த.செல்வக்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி குழந்தைகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டு வாசிப்பு நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் பங்கு பெற்ற வாசிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு 
தஞ்சாவூர், ஜூலை 24- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வளமையம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான, புதிய அனைத்து பாடப்புத்தகங்கள் குறித்த பயிற்சி வகுப்பு இரு இடங்களில் நடைபெற்றது. பேராவூரணி வட்டார வளமையத்தில் நடைபெற்ற பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ரவிச்சந்தி ரன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற பயிற்சியை வட்டார வளமைய மேற்பார் வையாளர் ரெ.பரமசிவம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  முதல் கட்டமாக ஜூலை 23, 24 ஆகிய தேதிகளிலும், தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 25, 26 ஆகிய தேதிகளி லும் நடைபெறுகிறது. இதில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 2 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை ஆசிரி யர்கள் சுமார் 214 பேர் கலந்து கொள்கின்றனர். கருத்தா ளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் கா.பரமேஸ்வரி, பா. ராமதனலெட்சுமி, லா.பெமிலா இருதயமேரி, ச.சித்ரா ஆகி யோர் செயல்பட்டனர்.


புதிய பாடப் புத்தகம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
பொன்னமராவதி, ஜூலை 24- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வழிகாட்டுதலின்படி 2019ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்புத்தகம் தொடர்பான இரண்டு நாட்கள் புத்தாக்கப் பயிற்சி பொன்னமராவதி வட்டார வள மையத்தில் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  முதல் நாள் நடைபெற்ற பயிற்சியை பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன் மற்றும் பால்டேவிட் ரோசாரியோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறி வியல் பாடம் கற்பிக்கும் அனைத்து தொடக்கநிலை ஆசிரி யர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இதில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்கும் விளக்க செயல்முறை அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சி மூலம் ஆசிரியர்கள் புதிய பாடப் பொருளை புரிந்து கொள்ளுதல், பாடம் சார்ந்த பொருளை வளப்படுத்தி கொள்வதற்கும் மற்றும் கியு ஆர் கோடு மூலம் மாணவ- மாணவிகளுக்கு உடனுக்குடன் பாடம் சார்ந்த கூடுதல் தகவல்களை அளிப்பதற்கும் மிகப் பய னுள்ளதாக அமையும்.

அரியலூரில் நாளை அம்மா திட்ட முகாம்
அரியலூர், ஜூலை 24- அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஏழாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளை யம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்தி லும் அம்மா திட்ட முகாம் ஜூலை 26 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் பின்வருமாறு நடை பெற உள்ளது.  அரியலூர் வட்டத்தில் பெரியநாகலூர், கோவிலூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் பருக்கல் (கிழக்கு), தழுதாழைமேடு ஆகிய கிராமங்களி லும், செந்துறை வட்டத்தில் ஆலத்தியூர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் கிராமத்திலும் நடைபெறு கிறது. இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாது காப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப் படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித் துள்ளார்.