tamilnadu

புதுக்கோட்டை, கரூர் முக்கிய செய்திகள்

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற ஓய்வூதியர்கள் கோரிக்கை
புதுக்கோட்டை, அக்.15-புதுக்கோட்டை நகரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமை மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ம.வெள்ளைச்சாமி, என்.இராமச்சந்திரன், ஆர்.இராஜேந்திரசிங், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.முருகேசன், அ.மணவாளன், எம்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு வழங்கியதைப் போல ஜூலை 2019 முதல் பணப்பயனுடன் கூடிய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏனைய கருவூ லங்களில் வழங்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் கிராம உதவியாளர்களுக்கும் வரும் தீபாவளிக்குள் பண்டிகை முன்பணம் வழங்க மாவட்ட கருவூல அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக் கோட்டை நகராட்சி நிர்வாகம் டெங்கு காய்ச்சலைத் தடுப்ப தற்கும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில ஹேண்ட்பால்   சாம்பியன்ஷிப் போட்டி
கரூர், அக்.15- பரணி பார்க் பள்ளியும், கரூர் மாவட்ட ஹேண்ட்பால் சங்க மும் இணைந்து நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஹேண்ட்பால் வீரர்களுக்கான மாநில சீனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தேர்வு போட்டி வரும் 17-ம் தேதி பரணி பார்க் பள்ளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.1.2000-க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும். வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக் குள் கீழ்கண்ட தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு தங்க ளின் பதிவுகளை உறுதி செய்ய வேண்டும். தொடர்பு எண்: 97509-91014. மேலும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் வரும் 19, 20 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில சீனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் கரூர் மாவட்ட அணி சார்பாக விளையாட தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் மோகனரெங்கன், சங்க துணைத் தலைவர் ராமசுப்பிரமணியன், சங்க பொதுச்செய லாளர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.