tamilnadu

புரவி எடுப்பு விழா 

 பொன்னமராவதி, ஆக.13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனார், முத்துக்கோடன் அய்யனார், பள்ளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் பொட்டல் முன்பு வைக்கப்பட்டிருந்த புரவிகளை பொது மக்கள் வழிபட்டு பின் மேளதாளத்துடன் ஊர்வலமாக சுமந்து சென்றனர். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.