பொன்னமராவதி, ஆக.24- புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடந்த வெற்றி அறக்கட்டளை விழாவில் தைலமரம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தீமைகளை விளக்கி ஒட்டுமொத்த கிராம மக்களும் முன் நின்று வனத்தோட்டக் கழகத்தின் முயற்சியை மாற்றி அமைத்து பழக்கன்றுகளை நடச் செய்ய முன் முயற்சி எடுத்தமைக்காக பசுமைக் காவலர் எனும் விருதினை திருக்களம்பூர் கிராம நிர்வாக குழுத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் கருப்பையா, பொருளாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் இராஜமாணிக்கம், கூட்டுறவு சங்க இயக்குநர் இராமச்சந்திரன், நேதாஜி ஆகியோருக்கு அரசின் சுற்றுலாத் துறை முன்னாள் செயலாளர் பழனிக்குமார் வழங்கினார். விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குருசாமி, விவசாயிகள் சங்க தலைவர் நல்லுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை புதுக்கோட்டை விவசாயிகள் சங்க தலைவர் தனபதி செய்திருந்தார்.