tamilnadu

img

ஜம்மு- காஷ்மீரை சிதைத்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.6- 370-ஆவது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தை உடைத்து யூனியன் பிர தேசங்களாக சிதைத்த பாஜக அர சைக் கண்டித்து புதுக்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மேலும் மோடி அரசு நாடாளு மன்றத்தில் அடக்குமுறைச் சட்டங் களை இயற்றியும், ஏற்கனவே இருந்த உரிமைச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், சிஐ டியு மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, துணைத் தலைவர் ப. சண்முகம், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நக ரச் செயலாளர்கள் தென்றல் கருப்பையா, சி.ஜீவானந்தம், எம்.ஆர்.சுப்பையா, சி.அடைக்கலசாமி, எல்.வடிவேல், ஜி.நாகராஜன், டி. லட்சாதிபதி, நெருப்பு முருகேஷ், என்.பக்ருதீன், கரு.ராமநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். பீமராஜ், எஸ்.பாலசுப்பிரமணியன், பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.