புதுக்கோட்டை, ஆக.1- தேசிய வேலை உறுதித் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங் குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வியாழக்கிழமையன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி களிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த கூலியை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் திரு வரங்குளம் ஒன்றியச் செயலாளர் கே. நாடியம்மை தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி. சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றி யத் தலைவர் பி.ஸ்டெல்லாமேரி, துணைச் செயலாளர் வி.கலைச்செல்வி, பொருளாளர் எஸ்.அன்னலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.