புதுக்கோட்டை, நவ.20- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோதக் கொள்கைகளைக் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக் கோட்டை நகரத்தின் பல்வேறு பகுதி களில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகன தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. தொழிற்சங்க உரிமை, கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்ட வேண்டும். தொழில் நெருக்கடியால் வேலையிலி ருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளையும், விவசா யத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இப்பிரச்சாரம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு புதுக்கோட்டை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க சிஐடியு பொதுச் செய லாளர் எஸ்.பாலசுப்பிரணியன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை தொடங்கி வைத்து கிராம பஞ்சாயத்து இணைப்புக் குழுவின் மாநில தலைவர் ப.சண்முகம் உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா கொடி அசைத்து தொங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி சி.அன்புமணவாளன், சுமைப்பணித் தொ ழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் செ. பிச்சைமுத்து, நுகர்கொருள் வாணிபக் கழக சங்க நிர்வாகி ஏ.முத்தையா, குடிநீர் வடிகால் வாரிய சங்க நிர்வாகி எஸ்.யாசிந்த், கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி எம்.கோவிந்தராஜன் உள்ளிட் டோர் பேசினர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் தொடங்கி பிரச்சாரம் அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், டிவிஎஸ் கார்னர், பிச்சத்தான்பட்டி, திருவப் பூர், திருக்கோகர்ணம், திலகர்திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இப்பிரச்சாரத்தில் ஏராளமான தொழிலா ளர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் குருங்குளம் சர்க்கரை ஆலை, செங்கிப்பட்டி, திருவை யாறு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, அம்மாபேட்டை, தஞ்சை நகரம் ஆகிய இடங்களில் 5 குழுக்களாக பிரச்சார இயக்கம் நடைபெற்றது. குருங்குளம் சர்க்கரை ஆலையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை திட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பி.காணிக்கை ராஜ், எஸ்.செல்வராஜ், எஸ்.சங்கர், பி.ரமேஷ், மாறன், ரவி, செந்தில்குமார், டி.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மருங் குளம், திருக்கானூர்பட்டி, வல்லம், நீலகிரி, மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
செங்கிப்பட்டி
செங்கிப்பட்டியில் நடைபெற்ற இயக் கத்துக்கு இ.முகமது சுல்தான், சிபிஎம் மாவட்டக்குழு சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தொடங்கி வைத் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ. ஜீவகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், வடக்கு கே.காந்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இ.இமானுவேல், எஸ்.விஜயகுமார், என்.எஸ்.கே.விஜயகுமார், சிவக்குமார், பரமசிவம், வி.ராமலிங்கம், பி.ரவி, மோகன், சேகர், மணிவேல், அண்ணாதுரை, இம்மா னுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, சித்திரகுடி, ஆலக்குடி ஆகிய இடங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது.
திருவையாறு
திருவையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொடங்கிய பிரச் சார இயக்கத்துக்கு அய்யப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு போக்குவரத்துக் கழக மத்திய சங்கத் தலைவர் பி.முருகன், டி.காரல் மார்க்ஸ், எஸ்.ராமசாமி, டி.முருகானந்தம், என்.கண்ணன், எம்.சந்தான முத்து, கே.கர்ணன், தட்சிணாமூர்த்தி, கே.ரவி, எஸ்.கோவிந்தராஜ், சி.மாரியப்பன், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவையாறு கண்டியூர் பள்ளி அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஈ.டி.எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் ம.கண்ணன் துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பக்கிரிசாமி, விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.நம்பி ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பி.மாணிக்கம், தங்கமணி, ரஜினி, சந்திரோ தயம், ஜி.அன்பழகன், சதானந்தம், பால சுப்பிரமணியன், தண்டபாணி, லட்சு மணன், ராமர், கே.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலியமங்கலம், கோவி லூர், ராராமுத்திரைக்கோட்டை, மாரியம் மன் கோவில், தொம்பன் குடிசை ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது தஞ்சை நகரம் பாலாஜி நகரில் நடை பெற்ற பிரசார இயக்கத்திற்கு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் தலைமை வகித் தார். மாவட்ட துணைத்தலைவர் த. முரு கேசன் துவக்கி வைத்தார். சிபிஎம் மாநகரச் செயலாளர் என். குருசாமி வாழ்த்திப் பேசி னார். கே.அன்பு, கே.கல்யாணி, கே. பால முருகன், எஸ்.மில்லர் பிரபு, பி. ரமேஷ், ஆர்.மணிமாறன், ஏ.ராஜா, எம். முருகே சன், ஜி.கார்த்திகேயன், எம்.சுரேஷ், பி. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர் மாலை இந்த 5 குழுக்கள் இணைந்து, அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து புறப்பட்டு, கீழ வாசல், பனகல் கட்டிடம் வழியாகச் சென்று ரயிலடியில் நிறைவடைந்தது.