பொன்னமராவதி, டிச.15- புதுக்கோட்டை பொன்னமராவதி தாலுகாவில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் இருந்து கருப்புக்குடிப்பட்டி கிரா மத்தை தலைமை இடமாக கொண்டு தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி ஊர்ப்பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு செய்வது, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை டிச.16-ல் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை கிராம பொதுமக்கள் அறிவித்து இருந்தனர். கிராம மக்களின் போராட்டம் தொடர்பாக ஞாயிறன்று பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இலுப்பூர் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சி யர் டெய்சிகுமார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடை பெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதை ஏற்று ஊர் பொதுமக்கள் போரா ட்டத்தை ஒத்திவைத்தனர். புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் எம்.காளிதாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ச.பால முரளி, பொன்னமராவதி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு மற்றும் சுவாமிநாதன், மண்டல துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வா ளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள் ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.