tamilnadu

img

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார்.
பீகாரில்  243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன.  இதில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் இறுதி கட்டத்தில் பல குளறுபடிகள் நடந்ததாக மகா பந்தன் கூட்டணி குற்றம்  சாட்டியது. 
இந்நிலையில் இன்று  பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் 4வது முறையாக  நிதீஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் பாகு சௌஹான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பாஜகவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.