tamilnadu

img

கப்பல் கட்டும் தளத்தில் விபத்தில் பத்து பேர் பலி

விசாகப்பட்டினம், ஆக.1- ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டி னத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் பத்து பேர் பலியானார்கள்.  புதிதாக வாங்கப்பட்ட கிரேனை சனிக்கிழமை காலை 11 மணியளவில்  ஊழியர்கள் பரிசோதனை செய்த போது அது சரிந்துவிழுந்தது. தக வலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். காயமடைந்தவர்களுக்கு உய ரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் மீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசா ரணை நடத்தினார். மல்காபுரம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர், கப்பல் கட்டும் தளம் முன்னர் குவிந்தனர். தங்களை உள்ளேவிட காவல்துறை அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டினர். இத னால்,  உள்ளே இருக்கும், தங்களின் குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என தெரிவித்தனர். இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் ஆறு பேர் உடல்கள் மீட்கப்பட்டன. சிந்தியா ஸ்டீம்ஷிப்  நிறுவனத் தால் 1941- ஆம் ஆண்டு தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்தால் நிறுவப் பட்ட நாட்டின் பழமையான கப்பல் கட்டும் தளமாகும். 1961 ஆம் ஆண் டில் கப்பல் தளம் தேசியமயமாக்கப் பட்டு இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமி டெட் (எச்.எஸ்.எல்) என பெயர் மாற் றம் செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு கப்பல்துறை அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற் றப்பட்டது குறிப்பிடத்தக்கது.