tamilnadu

பேராவூரணி நகரில் பிளக்ஸ் பேனர் அகற்றம்

தஞ்சாவூர், செப்.4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது.  பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பரத் தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதற்கிடையே சிலரால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தலைமையில், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ஆ.கணேசன், உதவிப் பொறியாளர் ஆர்.ஜெயக்குமார், காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் இல.அருள்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில், பேராவூரணி கடைவீதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளெக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் நெடுஞ்சாலை துறை, பேருராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.