தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
கோவை, ஜூன் 23 - உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏற்புடையதாய் இல்லை. சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையாய் உள்ள நீதிமன்றத்தின் மீது அவநம்பிக் கையை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்பு கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக அரசிற்கு மனு அளித்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரான உடுமலை சங்கர், கெளசல்யா ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு உடுமலை பேருந்து நிலையம் அருகில் பட்ட பகலில் கூலிப்படையினரால் தாக்கப் பபட்டனர். இதில் படுகாயமடைந்த சங்கர் உயிரிழந்தார். படுகாயம டைந்த கெளசல்யா தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். தமிழகத் தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் தொடர்பாக கெளசல்யா வின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். இதன் தீர்ப்பு திங்களன்று வழங்கப்பட்டது. இதில் கெளசல்யா வின் தந்தை விடுவிக்கப்பட்டும், இதர குற்றவாளிகளின் மரண தண் டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளிக் கப்பட்டுள்ளது. இது முற்போக்கு ஜனநாயக அமைப்புகளை அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத் தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யக்கோரியும், சாதி ஆவண படுகொலைகளுக்கு எதி ராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத் தியும், மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் செவ்வா யன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலா ளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, தபெதிக சாஜித், சமூக நீதி கட்சியின் பன்னீர்செல்வம், தமிழர் திராவிட கட்சியின் வெண்மணி, ஆதி தமிழர் பேரவை முத்துகுமார், ஒடுக் கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் அஷ்ரப்அலி, இந்திய மாணவர் சங்கத்தின் தினேஷ்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்
உடுமலை சங்கர் கொலை வழக் கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் முற்போக்கு அமைப் பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், ஆதித் தமிழர் பேரவை மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை செல்வம், தந்தை பெரியார் திராவிடர் கழக திருப்பூர் மாநகரச் செயலாளர் சண். முத்துக்குமார், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி செல்வம், திராவிடர் விடு தலைக் கழகம் மாநகரச்செயலாளர் முகில் இராசு, திராவிடர் தளம் பல்ல டம் ஒன்றிய செயலாளர் மணிகண் டன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சம்பத், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் மணிகண்டன், தலைவர் ஞான சேகர், வடக்கு மாநகரப் பொரு ளாளர் பாலசுப்பிரமணியம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா, பொருளாளர் ஷகிலா உள்ளிட்ட மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியா ரிய அமைப்புகளைச் சார்ந்த பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கை மனு வினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளிக்கப்்பட்டது.
சேலம்
சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம் முன்பு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சேலம் வடக்கு மாநகரம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலை வர் ஆர்.குழந்தைவேல், மாநகர செயலாளர் பி.செந்தில்குமார், சிபி எம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் ்பினர் எம்.சேதுமாதவன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.