tamilnadu

img

பெண்ணை வன்புணர்வு செய்த கயவர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், நவ.23- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றி யம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரி எனும் பெண்ணை  பாலியல் வன்புணர்வு  செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருக்கும் அதிமுக பிரமுகர் செல்வராஜ் என்பவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் சனிக்கிழமை கட்சியின் மாவட்டச் செய லாளர் ஆர்.மணிவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.  இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான அதிமுக பிரமுகரான செல்வராஜை கைது செய்ய வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி காவல் துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆயினும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் கடந்த அக்டோபர் 23 அன்று ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆனால் அவர்களை காவல் துறை கைது செய்து பின்னர் விடுதலை செய்தது. இந்நிலையில் 55 நாள் ஆனபின்னும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் நவம்பர் 23 சனிக்கிழமையன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம். சின்னதுரை, இளவரசன், பரமசிவம், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், மாதர் சங்க தலைவர்கள் எஸ். கீதா, எஸ். பாக்கியம், எஸ். மீனா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.