பிசிஜி தடுப்பு மருந்து - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
சென்னை,ஜூலை 15- நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமைச்சர் விஜய பாஸ்கர் ஜூலை 15 வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்குப் பாது காப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரை யிலான முதியவர்களுக்குச் செலுத்துவ தன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறை வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதி யவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தி னைச் செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதி யினைக் கோரியிருந்தது. இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தர விட்டுள்ளார். இந்தச் சோதனை முயற்சி யை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்க வுள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தினை முதி யவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மை யைக் குறைக்கவும் மருத்துவம னையில் அனுமதியைத் தவிர்க்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும் பேருத வியாக அமையும். தமிழ்நாடு முதல்வ ரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.