கொரோனா தொற்று நெறிமுறைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய 'மண்டிஸ்' மூலம் பஞ்சாப்பில் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது என்று உணவு மற்றும் வழங்கல் அமைச்சர் பாரத் பூஷன் ஆஷு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1 முதல் கொள்முதல் தொடங்க திட்டமிட்டிருந்தோம், ஆனால் பஞ்சாப் அரசாங்கம் அதை இன்றே தொடங்க முடிவு செய்தது. சிசிஎல் (ரொக்க கடன் வரம்பு) மற்றும் நடைமுறை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். மண்டிஸ் எண்ணிக்கை கொரோனா நெறிமுறைகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய 1,800 இலிருந்து 4,019 க்கு மேல் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
கோதுமை வாங்கும் போது செயல்படுத்தப்பட்ட அதே நடவடிக்கைகளின் வெற்றியை மனதில் வைத்து '' மண்டிஸ் '' எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் ஆறு முதல் ஏழு மாவட்டங்களில் விவசாயிகள் 'மண்டிஸ்' வர ஆரம்பித்துள்ளனர். இந்த பருவத்தில் ஒரு பம்பர் பயிர் உள்ளது. நவம்பர் 30 வரை கொள்முதல் தொடரும், இதனால் யாரும் எந்தவிதமான இடையூறுகளையும் சந்திக்க வேண்டியதில்லை என கூறியுள்ளார்.