tamilnadu

img

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

நீலகிரி, மார்ச் 1-  நீலகிரி மாவட்டம், உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங் கும் நிகழ்ச்சி சனியன்று நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங் கும் நிகழ்ச்சி சனியன்று  நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, உதகை சட்டமன்ற உறுப்பி னர் கணேசன் ஆகியோர் முன்னி லையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்க ளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாண வியர்களுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில், விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினி, வண்ணச் சீருடைகள், இலவச பேருந்து பயண அட்டை, புத்தகம் உள்பட பல்வேறு பொருட்கள் மாணவ, மாணவியர்களின் கல்வி நலனிற்காக வழங்கப்பட்டு வரு கிறது.  மேலும்,உயர்கல்வி பயில்வ தில் தமிழகம் முன்னோடி மாநி லமாக திகழ்ந்து வருகிறது. குறிப் பாக உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை களையும் அரசு எடுத்து வருகிறது. கல்விக்கு அதிக முக்கியத்துவம் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், தமிழக அரசு வழங்கும் இந்நலத்திட்டங்களை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி தங்க ளது அடிப்படை கல்வி மற்றும் உயர்க்கல்விகளை முழுமையாக திறம்பட பயின்று வாழ்வில் முன் னேற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, நீல கிரி மாவட்டத்தில் 2018-2019ம் ஆண்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர் வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.3 லட்சத் திற்கான காசோலை மற்றும் காம ராஜர் விருதுகளையும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ.1.5 லட்சத்திற் கான காசோலை மற்றும் காமரா ஜர் விருதுகளையும் மாவட்ட ஆட் சியர் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொன் தோஸ், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கப்பச்சி டி. வினோத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.நாசருதீன் உட்பட பள்ளி மாணவ, மாணவி யர்கள், ஆசிரியர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.