உதகை, அக். 24- பாரபட்சமான அணுகுமுறையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, அண்மையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் உதகையில் பொது இடங்களில் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிக ளுக்காக, கொடிகளையோ, தோரணங் களையோ கட்டக் கூடாது. மேலும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதோ அல்லது போஸ்டர்கள் ஒட்டுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என சொல்லப் பட்டிருந்தது. ஆனால், மாவட்ட ஆட்சியரின் இத் தகைய உத்தரவுகள் எதுவும் ஆளும் கட்சிக்கு பொருந்தாது போல. உத கையில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்ச்சிக்காக ஆளும் கட்சியின் கொடி கள் பரவலாகவும், அரசுக்கு சொந்த மான இடங்கள் உட்பட பல இடங்களி லும் கட்டப்பட்டிருந்தன. மாவட்ட நிர் வாகத்தின் உத்தரவை மீறி கட்டப் பட்டிருந்த கொடிகள் குறித்து, மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ எதுவும் கண்டு கொண்ட தாக தெரியவில்லை. ஆனால் இதர அரசியல் கட்சிகள் அல்லது அமைப்பு கள் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்காக உரிய முறையில் அனுமதி கேட்டால், ஏரா ளமான சட்டங்களை கூறி அனுமதி மறுக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, ஆளும் கட்சியின் விதி மீறல்களை மட்டும் கண்டு கொள்வ தில்லை. மாவட்ட நிர்வாகம் தான் பிறப் பிக்கும் எந்தவொரு உத்தரவையும் முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து ஒரு சாராருக்கு மட்டும் கட் டுப்பாடுகள், மற்றவர்களுக்கு ஒரு அணுகுமுறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழுவின் சார்பில் கண்டனம் தெரிவிப்பதோடு, மேலும் எந்தவொரு புதிய உத்தரவை பிறப் பிப்பதற்கு முன்பும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் கூட்டத்தை கூட்டி அது குறித்து விவா திக்கும் நடைமுறையையும் எதிர் காலத்தில் கடை பிடிக்க வேண்டுமென வும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.