நாமக்கல், ஜூன் 7- ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சமூகநலன் மற்றும் சத்து ணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ. சரோஜா சனியன்று வழங்கினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் வாங்கப் பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உப கரணங்களை சமூகநலன் மற்றும் சத்துண வுத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வழங் கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு 8 ஏசி இயந்திரங் கள், தீவிர சிகிச்சை பிரிவில்பயன்படுத்தக் கூடிய நோயாளிகளின் தேவைக்கேற்ப படுக்கை உயரத்தை மாற்றியமைக்கக் கூடிய அதிநவீன 4 கட்டில்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை அதி கரிக்கும் 3 கருவிகள், தொடுதிரை வசதியு டன் கூடிய 2 இசிஜி கருவிகள், 1செமி ஆட்டோ அனலைசர் கருவி, கிருமி நாசினி திரவம், 2 செல்கிளினர் கருவிகள், விரலில் மாட்டி உடலின் ஆக்சிஜன் அளவை கண்ட றியும் பெரிய நபர்களுக்கான 2 கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், ராசி புரம் நகரக்கூட்டுறவு வங்கி தலைவர் எம். பாலசுப்பிரமணியன், நகராட்சி பொறியா ளர் உள்பட மருத்துவர்கள், அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.