tamilnadu

திருச்செங்கோடு, தருமபுரி முக்கிய செய்திகள்

பொது இடத்தில் புகைபிடிப்போருக்கும்,  கடைகளுக்கும் அபராதம்: சுகாதாரத்துறை

திருச்செங்கோடு, டிச.31-  திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பகுதி கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு கடைகளில் திங்களன்று சுகாதார துறையினா் ஆய்வு மேற்கொண்டு விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனா். நாமக்கல் மாவட்ட சுகாதார துணை இயக்குனா் சோமசுந்தரம் உத்தரவின்படியும், மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் பாலமுருகன் அறிவுறுத்தலின்படியும் மல்லசமுத்திரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சுகா தார துறையினா் பள்ளி,கல்லூரி,மருத்துவமனை அருகில்  உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது பொது  இடங்களில் புகைபிடிப்போர் மற்றும் கடைகளுக்கு புகை யிலை தடுப்பு சட்டத்தின்கீழ் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியம், சுகாதார ஆய்வாளா்கள் அருள்பிரகாசம், சரவணபவன் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டனா். 

நல்லம்பள்ளி அருகே பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
தருமபுரி, டிச. 31- நல்லம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள சேசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவமணி (48). தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஹாலோ பிளாக் கல்  தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலை யில் தவமணி ஞாயிறன்று தனது குடும்பத்தினருடன் உற வினர் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான சிவாடிக்கு சென்றார்.திங்களன்று தவமணி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.  இதைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது  பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 66 ஆயிரம்பணமும், 7½ பவுன் தங்க நகையும் திருட்டு போய் இருப்பது  தெரியவந்தது. இதுகுறித்து தவமணி அதியமான் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டனர். இதில் தவமணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே செல்வதை மர்ம நபர்கள் நோட்ட மிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த கட்டித்தின் மேல் மாடியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட் டிருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை யும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு கொள்ளை யர்களை தேடி வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியினரி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

;