நாமக்கல், பிப். 10- நாமக்கல்லில் வட்டார அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங் கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் பிப்.18 ஆம் தேதியன்று திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தி லும், மற்றும் பிப். 22 ஆம் தேதியன்று பள்ளிபாளையம் வட் டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலும் நடைபெற உள் ளது . இந்த வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் வட்டாரத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாமிற்கு தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்க ளுடன் கலந்துக் கொள்ள வேண்டும். எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா (ஆண்-பெண் இரு பாலரும்) இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.