நாமக்கல், செப்.19- தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.20 ஆம் தேதியன்று (வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பங்கு பெறும் வேலை யளிப்போரும் வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணி வாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. ஆகவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் நிறுவ னங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் செப்.21 ஆம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொள்ளலாம். எனவே, வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் பயனடையு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங் களுக்கு திட்ட அலுவலர், மகளிர் திட்டம், அறை எண். 207, மாவட்ட ஆட்சியரகம், சேலம் மாவட்டம், என்ற முகவரியில் செயல்படும் மகளிர் திட்ட அலுவல கத்தை நேரிலும், 0427-2411552 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.