நாமக்கல், ஜூன் 23- துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கம் (சிஐடியு) நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) நாமக்கல் மாவட்ட 4வது மாநாடு கே.கே.நினைவரங்கத்தில் ஞாயிறன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங் காரம் கொடியேற்றி வைத்தார். இதில் கிராம ஊராட்சி தலை வர் ஆர்.ரேவதி வரவேற்புரை யாற்றினார். மாநாட்டை தமிழ் நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர்கள் சம்மேள னம் மாநிலத் தலைவர் நா.பால சுப்பிரமணியன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அங்கன்வாடி ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் எல்.ஜெயக்கொடி வாழ்த்தி பேசினார். சங்க மாவட்ட செயலாளர் வீ.கண்ணன், மாவட்ட பொருளா ளர் ஏ.முருகேசன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.
தீர்மானம்
இம்மாநாட்டில், துப்புரவு பணி களை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடும் முடிவை கைவிட வேண்டும். நகராட்சி, பேரூராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப துப்பரவு தொழி லாளர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசாணை 2டி எண் 62 நாள் 11.10. 2017 ன் படி நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் அரசுடன் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். துப்புரவு தொழிலாளர் கள் அனைவருக்கும் புதிய குடி யிருப்புகள் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகனூர் பேரூராட்சியில் துப்புரவு பணி யாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். ஏழாவது ஊதி யக்குழு பரிந்துரைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணிமுடித்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 1.10 .2017 முதல் பணி ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன
புதிய நிர்வாகிகள் தேர்வு
கௌரவத் தலைவராக என்.ஜீ.ராஜகோபால், மாவட் டத் தலைவராக வி.கண்ணன், மாவட்ட செயலாளராக ந.வேலு சாமி, மாவட்ட பொருளாளராக கு.சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர்களாக மூக்கன் ஸ்டெல் லாமேரி, மாவட்ட துணை செய லாளர்களாக ஏ.முருகேசன், ஆர்.ரேவதி உள்ளிட்ட புதிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.